ஜனவரி, 2007 க்கான தொகுப்பு

எனக்குள் நீ!

ஜனவரி 30, 2007

நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம்

நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே

என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது

மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ

கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ

-யாழ்_அகத்தியன்

தண்டனை!

ஜனவரி 30, 2007

எழுத்துக்களை சிறைப்பிடித்து
உனக்கு கவிதை எழுதினேன்

அதைக் கிழித்தெறிந்து
தண்டனையை எனக்கு
கொடுத்தாய்

-யாழ்_அகத்தியன்

என் பேனாவின் ரகசியம்!

ஜனவரி 19, 2007

என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை

*

கண்மூடி கிறுக்கிவிட்டு
கண் திறந்து தேடுகிறேன்
ஏதாவது கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று

தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான்
உன் பேனாவுக்கு நன்றி சொல்ல

என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி

பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு

உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலைகுனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று

உன் தோழிகள் மட்டும்தான்
கண்டு பிடிக்கிறார்கள் உன்
சினுங்களை மட்டும் கவிதையாய்
வடிக்கிறது என் பேனாவென்று

உன் புகைப்படத்தோடு
ஒரு நாள் இருந்த பின்தான்
என் பேனா கவி எழுத மறுக்கிறது

உனக்காய் எழுத நினைத்த
எந்த கவிதையையும்
எழுதவேயில்லை என் பேனா
அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்

-யாழ்_அகத்தியன்

என் டைரி!

ஜனவரி 19, 2007

என் டைரியை வாசித்து விடு
என் ஏக்கங்களை புரிந்து கொள்ள

என் கவிதைகளை வாசித்துவிடு
என் காதலை புரிந்து கொள்ள

உண்மையைத் தெரிந்து
கொள்ள வேண்டுமா?

என்னை வாசித்து விடு
உன்னைத் தெரிந்து கொள்வாய்

-யாழ்_அகத்தியன்

உலகம்!

ஜனவரி 9, 2007

உன்னைச் சுற்றி வரச்சொன்னா
என் கவிதைகள் உலகம் சுற்றி
வருகிறது

உலகம் சுற்றி வரச்சொன்னா
நான் உன்னை சுற்றி வருகிறேன்

-யாழ்_அகத்தியன்

பாதை!

ஜனவரி 9, 2007

நீ நடந்து பழகிய பாதை
எங்கே காட்டிக்கொடு
நான் ஊர்ந்து பழக வேண்டும்

-யாழ்_அகத்தியன்

தேடலின் சுகம்!

ஜனவரி 9, 2007

உன்னைத் தேடிய
களைப்பில்த்தான் என்னைக்
கவிஞனாக்கிக் கொண்டேன்
உன்னைக் களைப்போடு
சந்திக்க விரும்பாமல்

-யாழ்_அகத்தியன்

வெற்றிடம்!

ஜனவரி 9, 2007

நீ இல்லாத வெற்றிடத்தை
யாரல் நிரப்ப முடியுமென்று
எண்ணிக்கொண்டிருந்தேன்
உன் பிரிவுக்காய் அழப்போன
அனாதையின் மரணவீட்டின்
முலையில் நான்

-யாழ்_அகத்தியன்

உன் மனம்!

ஜனவரி 9, 2007

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்

உன் மனம்!

ஜனவரி 9, 2007

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்