என் முதல்க் கவிதையை
யார் கேட்டாலும் அழகாய்
எழுதிக்காட்டுகிறது உன் பெயரை
*
கண்மூடி கிறுக்கிவிட்டு
கண் திறந்து தேடுகிறேன்
ஏதாவது கவிதை எழுதியிருக்குமா
என் பேனாவென்று
தெரிந்தே எழுத்துப் பிழைவிடுவது
என் பேனாதான்
உன் பேனாவுக்கு நன்றி சொல்ல
என்னைக் கேட்பாய் என்று நினைத்தால்
நீ என் பேனாவை கேக்கிறாய் எப்படி
பிடிக்கும் இனி என் பேனாவை எனக்கு
உலகமே சந்தேகப்படுகிறது என் பேனா
யாருக்காக தலைகுனிகிறதென்று அதை
அறிந்த நீ வேணுமென்றே சந்தேகபடுகிறாய்
யாரிடம் வாங்கினேன் என் பேனாவையென்று
உன் தோழிகள் மட்டும்தான்
கண்டு பிடிக்கிறார்கள் உன்
சினுங்களை மட்டும் கவிதையாய்
வடிக்கிறது என் பேனாவென்று
உன் புகைப்படத்தோடு
ஒரு நாள் இருந்த பின்தான்
என் பேனா கவி எழுத மறுக்கிறது
உனக்காய் எழுத நினைத்த
எந்த கவிதையையும்
எழுதவேயில்லை என் பேனா
அதனால்தான் இன்னும்
நான் கிறுக்கனாய்
-யாழ்_அகத்தியன்