இனியவளே…
என்னைக் கோவப்படுத்தி
பார்ப்பதற்க்கானா உன் தேடல்
தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது
தோல்விக்கு மத்தியிலும்
ம்ம்…
உனக்கெப்படி தெரியும்
உன்னை யாரும்
கோவப்படுத்தினால்தான்
எனக்கு கோவம் வருமென்று
***********************************
நமக்குள் பிரிவே வரக்கூடாது
அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது
ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக
நீ இருந்துவிட கூடாதென்பதால்
***********************************
உன் கல்மனதுக்குள்
நுழையும்வரைதான்
யோசித்தேன் எப்படி
நுழைவதென்று
நுழைந்தபின் மறந்தே
போனேன் எப்படி யோசித்து
நுழைந்தேனென்று
***********************************
கவிதைகள் எழுதத்
தெரியுமா என்று கேட்டார்கள்
நான் தெரியாது என்றேன்.
அப்ப என்ன தெரியுமென்று
கேட்டார்கள்
கவிதை ஒன்று
தெரியுமென்றேன்.
எங்கே சொல் என்றார்கள்
உன் பெயரைச்
சொல்லி முடித்தேன்.
-காண்டீபன்