‘இனியவளே...! [4]’ பகுப்புக்கான தொகுப்பு

இனியவளே…! [4]

டிசம்பர் 1, 2006

இனியவளே…

என் இறந்த காலம்
மிக சோகமானது
அதை மறக்க வைக்க
இறைவன் கொடுத்த
நிகழ்காலம்தான்
நீ எனக்கு

**********************************

நான்
பொய் சொல்ல
விரும்பவில்லை

உன்னை ஞாபகப்படுத்த
உன் புகைப்படம் வேண்டாம்
உன் புன்னகையும் வேண்டாம்
உன் கவிதையும் வேண்டாம்
ஏன் உன் நினைவும் வேண்டாம்
உன்னை ஞாபகப்படுத்திக்கொண்டே
இருக்க எதுவாலும் முடியாது
உன்னைத்தவிர எனக்கு

*********************************

இதுவரை நான் அசிங்கமானவன்
என்று சந்தோசப்பட்டதில்லை
நீ அழகானவன் என்று சொல்லும் வரை

***********************************

நான் உன் கவிதையின் ரசிகன்
அதனால்தான் சொல்கிறேன்
இன்றே இறந்து போக தயார்
அடுத்த நொடியே நான் உன்
பேனாவாக பிறப்பேன் என்ற
உறுதி மொழி கிடைக்குமென்றால்

-காண்டீபன்