‘இனியவளே...! [7]’ பகுப்புக்கான தொகுப்பு

இனியவளே…! [7]

December 1, 2006

என்னோடு நடந்து வந்த நட்பு
ஏன் உன்னைக் கண்டதும் ஓடி
ஒழிகிறது ஓ… அவ்வளவு
பயமா காதலுக்கு

*

காதலைக் காட்டிக் கொடுக்காதேயேன்று
அதிகமாய் என்னிடம் உன்னைப் பார்க்கும்
போதுதான் குட்டு வாங்கிகிறது என் மனம்

*

நீ கெஞ்சிக் கெஞ்சிக் கேட்டும்
சொல்ல தயங்குகிறேன் என்
முதல் கவிதை உன் பெயர் என்று

*

ஒரு காதல் பறவை என் மேல்
உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறது
என் நட்பென்ற தொடர் நாடகத்தை

-காண்டீபன்