ஆகா… இன்று உன்
பார்வையே சரியில்லையே
ஓ… நம்ம கல்யாணத்தைப்
பற்றி பேச போறியா?
*
நாளை முதல் கதைக்க மாட்டேன் என்கிறாய் தினமும்
கதைத்துக் கொண்டே ஓ…..
நீயும் பரம்பரைக் குடிகாரியா?
*
என்னை விட்டு விலகிடு
என்கிறேன் முடியாதென்கிறாய்
அப்படியென்றால் நீ என் உயிரா?
மரணத்தால் மட்டுமே உன்னை பிரிந்து விட
*
என்னவளே உனக்கு தெரிய வேண்டுமா? உன் பார்வையின் வலிமை என்னவென்று
அப்படியே உன் வீட்டுகண்ணாடியை நானாக
நினைத்து ஒரு தடவை பார் அது உடையும்
வடிவில் தெரிந்து கொள்வாய்
-காண்டீபன்