‘எனக்குள் நீ!’ பகுப்புக்கான தொகுப்பு

எனக்குள் நீ!

ஜனவரி 30, 2007

நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம்
வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம்
செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது
சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம்

நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும்
குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை
பேசவைக்க வேண்டுமே

என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள்
உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும்
உயிர் பெற்று விடுகின்றது

மழை விட்டது உனக்கும் தெரியும்
எனக்கும் தெரியும் இருந்தும் என்
குடைக்குள் இன்னும் நீ

கோவம் வரும் போது உன்னை
நினைக்க சொன்னாய் வராத போதும்
உன்னை நினைத்தேன் இப்ப என்னை
நினைப்பாயோ

-யாழ்_அகத்தியன்