‘காதல் (5-10)’ பகுப்புக்கான தொகுப்பு

காதல் (5-10)

December 1, 2006

எழுத்துப் பிழை விட்டாலும்
பரவாயில்லை
கவிதை எழுத சொல்லும்
காதல்

……………………………………………………………

கற்றுக்கொடுக்கும்…
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று

…………………………………………………………..

மீசை வளர்ந்த பிறகுதான்
நான் வயசுக்கு வந்தேனாம்
பொய் சொல்கிறார்கள்…
காதல் வந்த பிறகுதான்
நான் வயசுக்கே வந்தேன்

…………………………………………………………..

நீ
என்னங்க.. என்று
என்னை அழைக்கும்
போதுதான் காதல்
என்னை தட்டி எழுப்புகிறது

……………………………………………………………

நீ பிரிந்து
தூர மறையும் போதுதான்
காதல் எனக்குள்
உதிக்க ஆரம்பிக்கிறது

…………………………………………………………..

உன் பிரிவிலாவது
பொய் சொல்ல
வைத்திருக்கும்
காதல்………..

-காண்டீபன்