உன் மனம்!

ஜனவரி 9, 2007 by kandeepan

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்

உன் மனம்!

ஜனவரி 9, 2007 by kandeepan

என்னைக் கல்லில்
கட்டி கடலில் யார்
போட்டாலும் கல்லே
எனைக் காப்பாற்றும்

உன் மனக்கல்லை
காதலித்தவனென்ற
உண்மை சொன்னால்

-யாழ்_அகத்தியன்

வருக 2007

ஜனவரி 3, 2007 by kandeepan

உயிர்கொடுக்காத ஊனமான வருசங்களையே என் வயதெனக்கூறி திரியும் என்னை 2007 ம் ஆண்டாவது உன்னை சந்திக்க வைத்து உயிர்கொடுத்த வருசமென சொல்லவைக்குமா? கேள்விக்குறியோடு எடுத்து வைக்கிறேன் உன் வரவுக்காய் ஏங்கியபடி என் வலதுகாலை

-யாழ்_அகத்தியன்

இனியவளே…! [14]

ஜனவரி 3, 2007 by kandeepan

தயவுசெய்து எனக்குமுன் கண்மூடி
கடவுளை கும்பிடாதே உனை
பிரிந்துவாழ பழகிக்கொண்டுவிடுவேன்

***

என்னை பக்கத்தில் வைத்துக்கொண்டு
எதற்காக எதிர்கால உன் புருசனுக்காய்
ரொம்ப நேரம் வேண்டுகிறாய்

****

நவக்கிரகத்தை சுற்றி வந்தேன்
உன்னை காணவேண்டுமென்று
உன்னை சுற்றி வருகிறேன் நீ
கிடைக்க வேண்டுமென்று

****

பார் உன் வரவை அறியாத
பக்தர்கள் எவ்வளவு பூக்களோடு
வருகிறார்களென்று

***

உனை கண்டவுடன் கண்மூடி
கும்பிட பயமாக இருக்கிறது
நீ காணாமல் போய்விடுவாயோ என

****

நீயே சொல் உன்னை முன்னுக்கு
வைத்துக்கொண்டு எதை நான் வேண்ட
முடியும் இறைவனிடம்

****

நீ எதற்கு வேண்டுமென்றாலும்
நேத்தி வைத்துக்கொள் தயவுசெய்து
எதிர்ப்பின்றி நாம் சேரவேண்டுமென்று
நேத்திவைக்காதே

-யாழ்_அகத்தியன்

இனியவளே…! [13]

ஜனவரி 3, 2007 by kandeepan

உன்னை பார்க்க வேண்டாமென்று
சொல்லும் சமுதாயமே என்னை
பார்க்காததால் இன்னும் இன்னும்
உன்னை பார்க்க வைக்கிறது

*****

பெற்றோர்களை சுற்றி வந்தேன்
உலகறிந்த பிள்ளை என்றார்கள்
உன்னை சுற்றி வந்தேன் ஊரைவிட்டே
ஒதுக்கி வைத்தர்கள்

****

உன்னை நான் கை விட்டாலும்
என்னை நீ கை விடாதே
நம்பிக்கை இல்லாமல் என்னால
வாழமுடியாது

****

தனியா நடந்தால் பாதையெங்கும்
முள்ளாய் குத்துகிறது
உன் கூட நடந்தால் பூக்களாய்
வரவேற்கிறது

****

என்னை கண்ணாடியில் பார்த்தால்
என் இறந்தகாலம் தெரிகிறது
உன்னை நேரில் பார்த்தால்
என் எதிர்காலம் தெரிகிறது

-யாழ்_அகத்தியன்

இனியவளே…! [12]

ஜனவரி 3, 2007 by kandeepan

கோயிலுக்கு போனாலாவது
உன்னை ஞாபகப்படுத்த எதுவும்
இருக்காது என்றுதானிருந்தேன்
ஏனோ என்னை கண்டதும் குருக்கள்
உந்தன் பெயரில் உள்ள மந்திரத்தையே
திரும்ப திரும்ப சொல்கிறார்

************

உன்னை சந்திக்க பேருந்தில்தான்
வருகிறேன் ஏதோ நான் விமானத்தில்
வருவது போல் இடுப்புபட்டியை தேடுகிறேன்

**************

எனக்காக நீயும் உனக்காக நானும்
விட்டுக்கொடுக்கும் போட்டியில்தான்
இன்னும் பிரியாமல் கூட வருகிறது
சமாதான புறாவாக நம் காதல்

****************

உன்னை சந்திக்கும் போது
கருக்கொள்கிறது உன்னை
பிரியும்போது கவிதையாய் பிறக்கிறது

****************

தயவு செய்து என்னை கவிஞன்
என்று உண்மை சொல்லாதே கிறுக்கன்
என்று பொய் சொல்லிவிடு அது போதும்
எனக்கு நான் பொய் சொல்லாதவன் என்று
நீ நம்பிவிட

*************

நிலையில்லாத வாழ்க்கையில் எதிலும்
நிம்மதி இல்லமால் வாழ்ந்து வந்தேன்
அனாதையாய் நானும் எங்கிருந்து
வந்தாய் நீ என் நிம்மதியாகவும்
என் ஆயிரம் உறவுகளின்
சொந்தகாரியாகவும்

-யாழ்_அகத்தியன்

மெளனம்!

டிசம்பர் 27, 2006 by kandeepan

உன் மெளனம்தான் சம்மதம்

என்றென்னி சாலை எங்கும்

சரணம் பாடித் திரிந்தேன்

உன் பேச்சில் ஏற்பட்ட காயம்தான்

அந்த மெளனம் என்று நீ

சொல்லும் வரை

-யாழ்_அகத்தியன்

நிலவே நிலவே..!

டிசம்பர் 24, 2006 by kandeepan

என்ன அதிசயம்
உன்னைக் கண்டதும்
சூரியன் நேரத்துக்கே
தூங்க போகிறது

ஓ….

நீதான் நேரம் தவறி
நேரத்துக்கு வந்து
விட்டாய் அதனால்தான்

என்னவளே இனியாவது
நீ நிலவென்பதை மறக்காமல்
வர வேண்டிய நேரத்தில் வா

-யாழ்_அகத்தியன்

தேசத்தின் குரல்!

டிசம்பர் 21, 2006 by kandeepan

தனக்காய் வாழ்ந்து மறைந்தவர்கள் கோடி எனக்கும் தெரியும் ஒரு நாள் பிரியும் உயிர் என்று நீ எங்களுக்காய் வாழ்ந்த உன் அயுளில் கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் உனக்காய் வாழ்ந்திருந்தால் உனை நோய் கொண்டு போயிருக்காது அப்படியென்ன உன்னை மீறிய அக்கறை தேசம் மீதும் மக்கள் மீதும் உனக்கு

உனக்கு தெரியுமா? ம்…. உனக்கெப்படி தெரியும் தேசத்தின் குரலாய் நீ வாழ்ந்தாய் என்று உனக்குத்தான் பட்டம் பதவி புகழ் எதுவுமே பிடிக்காதே
நீ விழி மூடியதால் எங்கள் தேசம் ஊமையானதும் உலக தமிழ்மக்கள் கண்ணிரில் மிதப்பதும் உன் பிரிவைப் பாட வார்தைகள் தேடித் தேடித் பேனாக்களே தற்கொலை செய்து கொள்வதை எல்லாம் உனக்கெப்படித் தெரியும்

நீதான் ஈழக்குழைந்தை கருவுற்ற காலம் முதல் பெறும் வருசம் வரை வாழ்ந்து விட்டு குழந்தையைப் பார்க்காமல் விழி மூடிவிட்டாயே இன்னும் கொஞ்ச காலமாவது உன் அயுளைமிச்சம் வைத்திருக்கலாமே உன் முத்தம் வாங்கும் பாக்கியத்தையாவது ஈழக் குழந்தை பெற்றிருக்குமே

உன் பெயர் ஈழ வரலாற்றில் இடம் பிடித்தாலும் எங்கள் வரலாற்றில் உன் பிரிவு வெற்றிடமாவே என்றும் இருக்கும்

உன் திறமையும் உன் வாழ்க்கையும் உன் வழி காட்டலும் உன் தத்துவங்களும் ஏன் உன் இறப்புக் கூடா என் போன்றவர்களுக்கு என்றும் பாடமாக இருக்கும்

உன் பிரிவால் வாடும் உன் துணைவியுடனும் எம் தேசத்தின் கண்ணீரோடும் நானும் கலந்து கண்ணிரில் குளிக்கிறேன் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

மனிதர்கள் மட்டுமே இறக்கிறார்கள்

மாமனிதர்கள் இறப்பதில்லை

அவர்கள் வரலாறாக என்றும் வாழ்கிறார்கள்

–யாழ்_அகத்தியன்

இனியவளே…! [11]

டிசம்பர் 21, 2006 by kandeepan

என்னை வெப்கொம்மில்
விடாமல் பார்க்கிறாயே
ஏன் வீட்டில் யாருமே
இல்லையா?

************************

ஹையோ ! செல்லம் நீ
திமிரா பேசும் போதே
நினைத்தேன் இவ்வளவு
அழகாய் இருப்பாய் என்று
அடிக் கள்ளி

*************************

கண்டதும் காதலில் எனக்கு
நம்பிக்கை இல்லாமல் போனது
சாட்டில் உன்னை சந்தித்ததால்

***************************

உலகமே என்னை ஒதுக்கிவைத்தாலும்
ஆன்லைனில் நீ நின்றால் போதும்
உலகத்தையே ஒதுக்கி வைப்பேன்
உனக்கு முன்னாலே

**************************

நாம்
சாட்டில் பேசும்போது நமக்கே
தெரியாமல் பல கவிதைகள்
இறந்து போகிறது இனியாவது
நாம் பேசுவதை பதிந்துவை நீ
கிழவி ஆகும் போது படித்துக்
காட்ட வேண்டும்

*****************************

என் கணனி என்னவோ
நான் தன்னை பார்பதாய்
நினைத்து ரொம்ப
வெக்கப்படுகிறது நீ
ஆன்லைனில் வந்துவிட்டாயா
என அடிக்கடி நான் பார்க்கும் போது

****************************

என் மெசெஞ்சரை கேட்டுப் பார்
என் காதலை உன்னிடம் சொல்ல
வந்து எத்தனை தடவை உனக்கு
அனுப்பாமல் அழித்த கவிதையை

******************************

என் அம்மா ஊருக்கே சொல்கிறா
என் மகனுக்கு கணனியில் எல்லாம்
தெரியும் என்று அவாக்கு எப்படி தெரியும்
எனக்கு உன்கூட சாட் பண்ண மட்டும்தான்
தெரியும் என்று

-யாழ்_அகத்தியன்